என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Election Commission explanation"
புதுடெல்லி:
கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு எந்திரத்தில் நாம் ஓட்டுகளை பதிவு செய்தால் எந்த சின்னத்துக்கு ஓட்டு விழுகிறது என்பதை உறுதி செய்யும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது.
இப்போது வி.வி.பாட் என்ற புதிய எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாம் ஓட்டு பதிவு செய்ததும் எந்த சின்னத்திற்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் ஒப்புகை சீட்டு வெளியே வரும்.
இந்த சீட்டை வாக்காளர்களிடம் கொடுக்க மாட்டார்கள். தேர்தல் அதிகாரிகள் சேகரித்து வைப்பார்கள். ஏதாவது தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் பிரச்சினை ஏற்பட்டால் அதை ஒப்பிட்டு பார்த்து சரிபார்த்து கொள்ளலாம்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது சரியாக இருக்கிறதா? என்பதற்காக பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஓட்டு எந்திரத்தில் மட்டும் ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க உள்ளனர்.
இவ்வாறு செய்யாமல் 50 சதவீத வி.வி. பாட் எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்து ஓட்டு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த வழக்கை தொடர்ந்தன. இதன் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.
அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் வக்கீல்கள் அரியமா சுந்தரம், அமித் சர்மா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அதில் கூறியிருந்ததாவது:-
வி.வி. பாட் எந்திரம் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய புள்ளியல் துறை சார்பில் 479 வி.வி.பாட் எந்திரங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி 99.9936 சதவீதம் வி.பி. பாட் எந்திரம் துல்லியமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்த எந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை 1628 சட்டசபை தொகுதிகள், 21 பாராளுமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஓட்டு மாறியதாக புகார் கூறியுள்ளார். மற்றபடி அனைத்து இடங்களிலும் மிகச்சரியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இந்த கருவி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இதில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.
நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 50 சதவீதம் வி.வி. பாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றால் மிகவும் காலதாமதம் ஆகும்.
ஒட்டுமொத்த பாராளுமன்ற தொகுதிக்குள் மொத்தம் 4125 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குள்ளும் சராசரியாக 250 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடியில் 50 சதவீத சீட்டுக்களை எண்ணுவதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.
இவ்வாறு 250 வாக்குச் சாவடிகளில் 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவதாக இருந்தால் 5.2 நாட்கள் தேவைப்படும். அதன்பிறகு அந்த சிலிப்களை கண்ட்ரோல் யூனிட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு 10 மணியில் இருந்து 12 மணி நேரம் தேவைப்படும். இவ்வாறு தொகுதி முழுவதும் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்க வேண்டும் என்றால் 6 நாட்கள் ஆகும்.
எனவே தேர்தல் முடிவுகளையே 6 நாள் கழித்து தான் அறிவிக்க முடியும். இதனால் இது சாத்தியமில்லாதது.
மேலும் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுவிட்டன. வி.வி.பாட் எந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக அவர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை.
இதனால் இந்த தேர்தலில் 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது முடியாத காரியம். ஆகையால் அடுத்த தேர்தலில் வேண்டுமானால் இதை பரிசீலித்து பார்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #SupremeCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்