search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eid al Adha"

    • இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
    • கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    முஸ்லீம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டி கையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது முஸ்லீம்களின் இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்ப டுகிறது.

    இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    நாகர்கோவில் இளங்கடை புதுதெரு அஷ்ரப் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுபோல தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டிலும் ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    நாகர்கோவிலில் மற்றொரு தரப்பினர் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இன்னொரு பிரிவினர் இப்பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். இதற்காக கேரளாவில் நாளையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    வேலூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி கஸ்பா, ஆர்.என்.பாளையம் ஈத்கா மைதானங்களில் ஏராளமான இஸ்லாயமிர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    வேலுரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

    வேலூர்:

    வேலூரில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

    செட்டியப்பனூர், வளையாம்பட்டு, நேதாஜிநகர், ஜாப்ராபாத் ஆகிய ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைநடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பரிமாறிக் கொண்டனர்.

    இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியார்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். வாணியம்பாடி பெரியப்பேட்டை மசூதியில் இஸ்லாமியா பெண்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    மெளலவி அப்துர் ரஹமான், முப்தி இக்பால், வாணியம்பாடி வாணிடெக் நிர்வாக இயக்குனர் படேல் முகமது யூசூப், தமிழக காங்கிரஸ சிறுபான்மை துறை மாநில தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா, உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல், திருவண்ணாமலை, ஆம்பூர், ஆலங்காயம், ஜாப்ராபாத், உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    ×