search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dublin"

    • மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
    • குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்

    வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

    இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.

    "சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.

    இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 346 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து பெண்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. #NZWvIREW #FirstOneday
    டப்ளின்:

    அயர்லாந்து - நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் பேட்ஸ், வாட்கின் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். வாட்கின் 59 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து பேட்ஸ் உடன் எம்எல் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அயர்லாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பேட்ஸ் 94 பந்தில் 24 பவுண்டரி, 2 சிக்சருடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீன் 77 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 121 ரன்கள் குவித்தார்.

    அதன்பின் வந்த ஏசி கெர் 45 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.



    அயர்லாந்து சார்பில் காரா முர்ரே 2 விக்கெட்டும், லாரா மாரிட்ஸ், கேபி லெவிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 491 என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கியது. பேட்டிங்கில் அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சிலும் அசத்தியது.

    இதனால் அயர்லாந்து அணியை 36.3 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அயர்லாந்து அணி சார்பில் கேப்டன் லாரா டெலானி 37 ரன்னும், ஜெனிபர் கிரே 35 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    நியூசிலாந்து அணி சார்பில் லே காஸ்பிரேக் 4 விக்கெட்டும், ஹன்னா ரோவி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து,
    அயர்லாந்து அணியை 346 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. #NZWvIREW #FirstOneday
    ×