search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSB"

    சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #SenthilBalaji
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகனிடம் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய பகல் 11 மணியில் இருந்து 12 மணி வரையும், காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய 12 மணியில் இருந்து 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. கூட்டணி கட்சியினர் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தனர்.

    இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதில் சற்று காலதாமதம் ஆனது. இதற்கிடையே தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் கலெக்டர் அறைக்கு செல்லும் வழியில் இருந்த முதல் கதவை திறக்கும்படி கூறினர்.

    உள்ளே அ.தி.மு.க.வினர் இருப்பதால் அவர்கள் வெளியே வந்த பின்தான் கதவை திறப்போம் என்று அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் தி.மு.க., கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் டி.எஸ்.பி., செந்தில் பாலாஜியை கையால் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரி அன்பழகனிடம், போலீசாரின் அடக்குமுறை குறித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர், புகார் தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் வேட்புமனுதாக்கலின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாகவும், தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ், தான் தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SenthilBalaji
    தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். #SenthilBalaji
    சென்னை:

    கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கலின்போது, 100 மீட்டருக்கு வெளியே இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வாயில் முன்பாகவே 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுடன் மைக்கில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகின்றபோது வேண்டுமென்றே அ.தி.மு.க. தொண்டர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து பிரச்சினையை ஏற்படுத்தினார். இது சம்பந்தமாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவிடம் தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக நான் நேரடியாக முறையீடு செய்தேன்.

    அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் தம்பி துரையின் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு துணையாகவே செயல்பட்டார். இவர் கரூர் மாவட்டத்திலேயே உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களுடனும் தொடர்பு உள்ளது.

    இவர் கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்தால் நியாயமான தேர்தலை நடத்த இயலாது. எனவே விதி மீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவை பாராளுமன்றம் தேர்தல் முடியும் வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் நகல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. #SenthilBalaji
    ×