search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dredging canal work"

    பெரியகுளம் அருகே கண்மாய் தூர்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் மூலம் சுற்றுவட்டார பகுதிகளான ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த கண்மாயை தூர்வார அரசு நிதி ஒதுக்கியது. அதற்காக பணிகளும் தொடங்கியது. அதன்பின்பு பணி கிடப்பில் போடப்பட்டது. மழை பெய்ததால் கண்மாய் நிரம்பியது. இதன் மூலம் அருகில் உள்ள குளத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தண்ணீரை பயன்படுத்தினர்.

    தற்போது கண்மாய் முற்றிலும் வறண்டு விட்டது. ஒரு சில விவசாயிகள் மோட்டார் மூலம் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தூர்வாரும் பணி மீண்டும் நடைபெறாததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கி விடும். அதன்பின்பு கண்மாயிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே அதற்கு முன்பு கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஒளிரும் ஈரோடு சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார பணி துவங்கப்பட்டது.
    ஈரோடு:

    ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் ஈரோடு மாவட்டத்தில் 30 குளம், குட்டை, ஏரி, ஓடை, தடுப்பணைகள், கால்வாய் மற்றும் அணைக்கட்டு போன்ற நீர் நிலைகளை (மொத்தம் 120 ஏக்கர் பரப்பளவு) சுத்தம் செய்து, தூர் வாரி, ஆழப்படுத்தி மற்றும் அகலப்படுத்தி அதிக அளவில் நீர் சேமிக்க வழிவகை செய்துள்ளது.

    இந்த நிலையில் மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் அருகே உள்ள 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொளத்துபாளையம் குளத்தை தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. ஒளிரும் ஈரோடு அமைப்பின் செயலர் கணேசன், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தனர்.

    தூர்வாரும் பணியின் மூலம் கொளத்துபாளையம் குளம் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுகிறது. பருவமழை மற்றும் கீழ் பவானி கால்வாய்கள் மூலம் உபரி நீர் சேமிக்கப்பட்டு அருகில் உள்ள கிணறுகள், ஆழ்துளை போர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயனுள்ளதாக அமையும்,

    மேலும் குடிநீர் தட்டுப்பாடு முழுவதும் நீங்கும் நிலை ஏற்படும். இந்த திட்டம் ரூ.20 லட்சம் செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

    கதிரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூலக்கரை தடுப்பணையின் கரைகளில் பனை விதைகள் மற்றும் வேப்ப விதைகள் ஊன்றும் பணி தொடங்கப்பட்டது.

    ஒளிரும் ஈரோடு அமைப்பின் துணை தலைவர் வெங்கடேஸ்வரன், அறங்காவலர்கள் சுந்தரம், தர்மராஜ், செயலர், ரவுண்ட் டேபிள்-211 அமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுவரை மூன்று நீர் நிலைகளில் சுமார் 5000 பனை விதைகள் மற்றும் 3000 வேப்ப விதைகள் நடப்பட்டுள்ளன. ஒளிரும் ஈரோடு அமைப்பு இதுவரை தூர்வாரிய 30 நீர் நிலைகளின் இரு கரைகளிலும் மற்றும் காலிங்கராயன் கால்வாய் இரு கரைகளிலும் பனை விதைகள் மற்றும் வேப்ப விதைகள் ஊன்றுவதற்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டு கரைகள் பலப்படுகிறது. இயற்கை பாதுகாக்க வழிவகுக்கப்படுகிறது. #tamilnews
    திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் பராமரிப்பு பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சரவண வேல்ராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Canaldredging

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அதிகாரிகளான பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலர் சரவணவேல்ராஜ், கால்நடைபராமரிப்பு துறை இயக்குநர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி சரவணவேல்ராஜ் பேசும்போது கூறியதாவது:-

    ஆறு, குளங்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்வதற்காகவும் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு வடிநில கோட்டம் மற்றும் காவேரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இவ்வாய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் காவேரி வடிநில கோட்டம் மூலம் ரூ.62.35 லட்சம் மதிப்பீட்டில் 66.11 கி.மீ தூரத்திற்கு 7 பணிகளும், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.167.65 லட்சம் மதிப்பீட்டில் 158.86 கி.மீ தூரத்திற்கு 23 பணிகளும்,திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.148.87 லட்சம் மதிப்பீட்டில் 136.75 கி.மீ. தூரத்திற்கு 43 பணிகளும் ஆக மொத்தம் ரூ.378.87 லட்சம் மதிப்பீட்டில் 361.72 கி.மீ. தூரத்திற்கு 73 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து திருவாரூர் வட்டம் திருக்கண்ணமங்கை பாசன வாய்க்காலில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 3.5 கி.மீ தூரத்திற்கு வாய்கால் தூர்வாரப்பட்டு வருவதை கணிப்பாய்வு அதிகாரி பார்வையிட்டு தூர்வாரும் பகுதிகளை அளவீடு செய்து சோதனை செய்தார். பின்னர் அன்னவாசல் கிராமத்தில் பாண்டவையாற்றில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1.50கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகளையும்,தென்கரை கிராமத்தில் பாசன வாய்க்கால் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு பணிகள் குறித்து செயற் பொறியாளரிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தென்கரை, பூசலாங்குடி, வடகரை ஆகிய கிராமங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேட்டை செல்வன், காவேரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் அசோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Canaldredging

    ×