search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Double Engine Govt"

    • பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
    • பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது.

    சத்தீஸ்கரில் பெண்களுக்கு பண உதவி வழங்கும் 'மஹ்தாரி வந்தன்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    மேலும், "இரட்டை எஞ்ஜின்" அரசாங்கத்தின் முன்னுரிமை பெண்களின் நலனே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

    பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, "நாட்டில் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கு தனது அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது" என கூறினார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    நரி சக்தியை மேம்படுத்தும் நோக்கில் மஹ்தாரி வந்தன் திட்டத்தை அர்ப்பணிக்க இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமாக உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்து இன்று பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் (திருமணமான பெண்கள்) வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.655 கோடி வரவு வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்காக நான் இன்று உங்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வேறு சில காரணமாக நான் உத்தரபிரதேசத்தில் இருக்கிறேன். நான் பாபா விஸ்வநாதரின் பூமியான காசியில் இருந்து பேசுகிறேன். அவர், உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிவார்.

    தாய் மற்றும் சகோதரிகள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறுகிறது. எனவே, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் (மத்திய மற்றும் மாநிலத்தின்) முன்னுரிமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனே.

    பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா 5 மாநில தேர்தலுக்கு முன்பாக 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.
    • நான்கு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளது.

    4 மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இது பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது. இந்த அரையிறுதி போட்டியில் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வர்ணித்தன.

    ஆனால், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. மேலும், மத்திய பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் சற்று எதிர்பார்த்திருக்காது. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைப்பதில் அசோக் கெலாட் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவரது நம்பிக்கையை பா.ஜனதா சிதைத்துவிட்டது.

    இந்த மூன்று மாநில வெற்றிகள் மூலம் பா.ஜனதா மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாக பா.ஜனதா உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஹரியானா, உத்தரகாண்ட், திரிபுரா, மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.

    இந்த நிலையில் அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இணைந்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநில அரசுகளுக்கு சென்றடைய மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருக்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் மக்கள் பயனடைவார்கள் என்பதை பா.ஜனதா தாரக மந்திரிமாக கொண்டுள்ளது. தற்போது இந்த இரட்டை என்ஜின் ஆட்சியில் மேலும் இரண்டு மாநிலங்கள் இணைந்துள்ளன.

    ×