search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DOUBLE CHARIOT"

    • வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ள.
    • 32 ஆண்டுகளுக்குப் பின், 2 மாரியம்மன் கோவில்களிலும் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ள. இந்த இரு கிராம மக்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இரு கோவில்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கு, ஏறக்குறைய ரூ.50 லட்சம் செலவில் 2 புதிய மரத்தேர்கள், நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமை மாறாத கலை நயத்தோடு வடிவமைக் கப்பட்டு, சமீபத்தில் வெள்ளோட்டம் நடத்தப் பட்டது.

    இதனைத்தொடர்ந்து, 32 ஆண்டுகளுக்குப் பின், 2 மாரியம்மன் கோவில்க ளிலும் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரட்டைத் தேரோட்டத்தில், பல்வேறு பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை முழங்க சேர்வையாட்டம் ஆடி கிராம மக்களும் பக்தர்களும் மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். இன்று 2 கிராம ராஜ வீதிகளிலும் பழமையான செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. 

    • மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டை தேரோட்டம் நடந்தது
    • முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டைத் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 27-ந்தேதி காப்புக் கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரட்டை தேரோட்ட விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின் ஒரு தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றொரு தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளிய பின் பக்தர்கள் வடம் பிடிக்க முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினர் செய்திருந்தனர். 

    ×