search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK resolution"

    பாராளுமன்றத் தேர்தலின்போது, விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டது.



    அதன்பின்னர், 18 சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், விடுபட்ட அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    “3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், உயர்நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த 2 தொகுதிகள் தொடர்பான வேறு எந்த வழக்குகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிடப்படவில்லை. தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு அரசை மைனாரிட்டி அரசாக நீடிக்க அனுமதிப்பதா?

    எனவே, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்படும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
    அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. இதில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்து.
    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு:- தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டு செயல்தலைவராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க.-வின் தலைமை பொறுப்பினை ஏற்க ஒன்றிய தி.மு.க வலியுறுத்துகிறது.

    நெல்லையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. தி.மு.க.-வில் தொடர்ந்து 50 ஆண்டு காலம் தலைவராய் இருந்தவரும் கலை, இலக்கியப்பணிகளில் புரட்சி செய்தவருமான கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. உலகின் 8-வது அதிசயமாக திருவள்ளுவருக்கு கன்னியா குமரியில் 133 அடி உயர சிலை அமைத்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கன்னியா குமரியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க சார்பில் முழுஉருவ வெண்கல சிலை அமைப்பது என்றும் அதனை ஓராண்டுக்குள் மு.க.ஸ்டாலின் கொண்டு திறந்து வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கன்னியாகுமரி பேரூர் செயலாளர் குமரி.ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், ஒன்றிய அவைத் தலைவர் ராஜகோபால், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×