search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Panchayat Meeting"

    • தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கூட்டம் அதன் தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமையில் நடை பெற்றது.
    • குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு அனுமதி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கூட்டம் அதன் தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ வரவேற்றார்.

    15-வது நிதிக்குழு திட்டம்

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் முள்ளக்காடு வக்கீல் செல்வகுமார், அருண்குமார், அழகேசன், ஞான குருசாமி, ஜெசி பொன் ராணி, தங்கமாரி யம்மாள் மற்றும் கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மூலம் இந்தஆண்டு 15-வது நிதிக்குழு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவை யான நடவடிக் கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தீர்மானங்கள்

    தொடர்ந்து குடிநீர் திட்டப்பணிகளில் பம் ரூம் அமைத்தல், ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், அடிபம்பு அமைத்தல், பம்ப்ரூம் கட்டுதல் போன்ற குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் பல்வேறு கிராம புறப் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு அனுமதி அளித்தல்,

    சுகாதார பணிகள் திட்டத்தில் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் நாப்கின் ஏரியூட்டிகள் தலா ரூ. 45 ஆயிரத்து 800 செலவில் 233 பள்ளிகளில் அமைப்பதற்கு ரூ. 1 கோடியே ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு ஒப்புதல் வழங்குதல்,

    குடிநீர், சாலை உள்ளிட்ட இதர பணி களுக்காக ரூ. 1 கோடியே 42 லட்சம் அனுமதி அளித்து, உடனடியாக பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் ரூ. 3 கோடியே 56 லட்சம் செலவில் பணிகள் மேற் கொள்ள தீர்மானி க்கப்ப ட்டது. இதேபோல் பல்வேறு செலவீன தீர்மா னங்கள் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    ×