search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "died tragically"

    • 4 பேருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
    • பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 21).

    மெக்கானிக். சம்பவத்தன்று இவர் அப்பு என்ற மணிகண்டன் என்பவரது மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் என மொத்தம் 4 பேர் அமர்ந்து சென்றனர்.

    மொபட் வால்பாறை - சின்கோனா ரோட்டில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதில் 4 பேரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு 4 பேருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் டிரான்ஸ் (38). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டி -அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய டிரான்சை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே டிரான்ஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் (75). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் சென்றார். பஸ் திருச்சி- கோவை ரோட்டில் வந்த கொண்டு இருந்த போது ராஜகோபால் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×