search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmar M.P. question"

    • கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்று தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
    • பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

    பரமக்குடி

    பாராளுமன்ற கூட்டத் தொடரில் நாட்டில் கால் நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியின் விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப் பட்ட கிராமங்களின் விப ரங்கள், அந்த திட்டம் செயல் படுத்துவதற்கான காலக் கெடு ஆகியவை குறித்து தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய இணை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்தை மேம்படுத்து வதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பால் பதப்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான திட்டம் பால் கூட்டுறவு மற்றும் உழவர் உற்பத்தி யாளர் அமைப்பு களுக்கு பால் நடவடிக்கை களில் ஈடுபடுதல், தேசிய கால்நடை மிஷின், கால்நடை வளர்ப்பு, உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடைகள் உடல் நலம் மற்றும் நோய் கட்டுப் பாடு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய மந்திரி கவுசல் கிஷோர் பதில ளிக்கையில், 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ஒரு நகரத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக ரூ.100 கோடி என்ற அடிப்படையில் சமமான நிதியை மாநில அரசு, மற்றும் நகர் புற உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கும்.

    100 ஸ்மார்ட் நகரங்களில் 7,978 திட்டங்களை செயல் படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதில் 5,909 திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ளன என்றார்.இது குறித்து பரமக்கு டியில் நிருபர்களிடம் தர்மர் எம்.பி. கூறுகையில், மத்திய அரசின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்தி னாலே நன்றாக இருக்கும். தமிழக மக்களுக்காகவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்ப டுத்தவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

    ×