search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees of Ayyappa"

    • சரண கோஷங்களை முழக்கி விரதம் இருக்கும் ஐயப்ப மார்களுக்கு மாலை அணிவித்தனர்.
    • கடைபிடிக்க வேண்டிய மரபு சார்ந்த முறைகளை ஐயப்ப குருசாமிகள் விளக்கி கூறினார்.

    பூதலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சரண கோஷங்களை முழக்கி விரதம் அனுசரிக்க தொடங்குவது வழக்கம். அதை ஒட்டி இன்று காலை வடக்கு பூதலூர் ஆனந்த விநாயகர் ஆலயத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய குவிந்தனர்.

    ஸ்ரீ ஆனந்த விநாயகர் சன்னதியின் முன்னர் வாழை இலை விரிக்கப்பட்டு அதில் பொங்கல், அவல், பொட்டுக்கடலை, பூ,விபூதி, குங்குமம், வாழைப்பழம் வைக்கப்பட்டிருந்தது.

    ஐயப்ப குருசாமி தங்கமணி மற்றும் அப்பாராசு ஆகியோர் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைத்து சூடம் ஏற்றி சரண கோஷங்களை முழக்கி விரதம் இருக்கும் ஐயப்ப மார்களுக்கு மாலை அணிவித்தனர்.

    புதிதாக மாலை அணிய வந்திருந்தவர்களுக்கு மாலை அணிந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய மரபு சார்ந்த முறைகளை ஐயப்ப குருசாமிகள் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து மாலை அணிய வந்து கொண்டு இருந்த பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரத முறையீடுகளை எடுத்து கூறினார்.

    • நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
    • அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1-ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில், காமராஜர் நகர் சக்தி விநாயகர் கோவில், சோமேஸ்வரன் கோவில், ஆகிய திருக்கோவில்களில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருக்கக்கூடிய அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் மாலை அணிந்து சுவாமியே சரணம் அயயப்பா என்ற பக்தி கோசங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில் பகுதி முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ×