search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dept"

    • அம்பையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நவநீத கிருஷ்ணன் குடும்பத்தினர் மகளிர் குழுக்கடன் வாங்கி உள்ளனர்.
    • நிதி நிறுவன ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்து உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி ஆத்தியடி தெருவை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (வயது 42). இவர் மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி மீனா. இவர்களுக்கு 1 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    அம்பையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நவநீத கிருஷ்ணன் குடும்பத்தினர் மகளிர் குழுக்கடன் வாங்கி உள்ளனர். பின்னர் வாங்கிய கடனை திருப்பி செலுத்திவிட்டனர். அதே நிறுவனத்தில் மீண்டும் ரூ.50 ஆயிரம் மகளிர் குழுக்கடன் வாங்கி உள்ளனர்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த மாத தவனையை செலுத்தமால், சிறிது கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்து உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த நவநீதகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×