search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepharathana"

    • மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.
    • சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து புகழ்பெற்ற தலமாகும்.

    பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    கொடிமரம் முன்பு எழுந்தருளியுள்ள நந்திக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் நந்தி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு தரிசனம் செய்தனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள உத்தாணியில் உள்ள முத்து முனியாண்டவர் கோவிலில் 50 ஆம் ஆண்டு ஊரணி பொங்கல்விழா, பால்குட காவடி எடுக்கும் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்கு டம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டிஆற்றங்க ரையிலிருந்து பெண்கள் உட்பட பக்தர்கள் ஏராளமா னோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கன்னிமூல கணபதி, முத்து முனியாண்டவர், தர்ம சாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனையும், மஹா தீபாரதனையும் நடைபெ ற்றது.

    இந்நிக ழ்ச்சியில் உத்தானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு உத்தாணி கிராமவாசிகள், லாரி தொழிலாளர்கள் சங்கத்தினர், விழா குழுவினர்கள் கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    ×