search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முனியாண்டவர் கோவிலில் ஊரணி பொங்கல்விழா
    X

    முத்து முனியாண்டவர் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    முனியாண்டவர் கோவிலில் ஊரணி பொங்கல்விழா

    • விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள உத்தாணியில் உள்ள முத்து முனியாண்டவர் கோவிலில் 50 ஆம் ஆண்டு ஊரணி பொங்கல்விழா, பால்குட காவடி எடுக்கும் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்கு டம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டிஆற்றங்க ரையிலிருந்து பெண்கள் உட்பட பக்தர்கள் ஏராளமா னோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கன்னிமூல கணபதி, முத்து முனியாண்டவர், தர்ம சாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனையும், மஹா தீபாரதனையும் நடைபெ ற்றது.

    இந்நிக ழ்ச்சியில் உத்தானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு உத்தாணி கிராமவாசிகள், லாரி தொழிலாளர்கள் சங்கத்தினர், விழா குழுவினர்கள் கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×