search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore private company"

    கடலூர் முதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்கூரை இரும்பு ஷீட்டுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பெரியகாரைக்காட்டை சேர்ந்த பார்த்திபன் (வயது 23), குடிகாட்டை சேர்ந்த பிரதீப் (18) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த மேற்கூரை இரும்பு ஷீட்டுகள் திடீரென காணாமல் போனது.

    இது பற்றி ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் எம்.புதூரை சேர்ந்த கார்த்தி (28) என்பவர் விசாரித்த போது, அந்த 55 இரும்பு ஷீட்டுகளை பார்த்திபன், பிரதீப் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.55 ஆயிரம் ஆகும்.

    இது பற்றி கார்த்தி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×