search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPI M AIADMK To Govt"

    நாடு முழுவதும் நீடிக்கும் லாரி ஸ்டிரைக்கை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொண்டது. #Parliament #LorryStrike
    புதுடெல்லி:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடைந்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



    மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர்.  லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக், இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

    லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மக்களவையில் இன்று பிரச்சினை எழுப்பினார். அப்போது, ஸ்டிரைக் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாகவும், காய்கறிகள் விலை உயர்ந்து வருவதாகவும் கூறிய அவர், போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. முகமது சலீம் பேசும்போது, லாரி உரிமையாளர்கள் மிக முக்கியமான பிரச்சினையை எழுப்பியிருப்பதால், போராட்டத்திற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #Parliament #LorryStrike
    ×