search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "COVID cases"

    • டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,595 ஆக உயர்ந்துள்ளது.
    • ஒமைக்ரானின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை தொற்றும் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக நாட்டின் தலைநகரில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று (கடந்த 24 மணி) நேரத்தில் 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், புதிய இறப்பு எண்ணிக்கையுடன், டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,595 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், கொரோனாவை சமாளிப்பதற்கான தயார் நிலையைக் கண்டறிய கடந்த 11ம் தேதி அன்று டெல்லி மருத்துவமனைகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒமைக்ரானின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை தொற்றும் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    • தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 12-ந்தேதி தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியிருந்தது. அதன்பிறகு 2 நாட்கள் சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தொற்று அதிகரித்து வரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்.

    தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து கால அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனாவை கட்டுப்படுத்த, மதுக்கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன.
    • 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

    பெய்ஜிங்

    கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக சைனா டெய்லி இதழ் தெரிவித்துள்ளது

    அந்த நகரத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுக்கடைகள், திரையரங்குகள், சலூன்கள், பூங்காக்கள் மூடப்பட்டன. மக்காவோ நகரத்தில் 600,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் புதிய தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    ×