search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cotton warehouse"

    • மின்விநியோகம் சீரான வேளையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவியது.
    • இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதமாகி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நெகமம் பிரிவில் கல்யாண சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இரவு திடீரென மின்விநியோகம் துண்டிப்பானது. பிறகு சிறிது நேரம் கழித்து மின்விநியோகம் சீரான வேளையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவியது.

    தீ மளமளவென பரவியதால் உடனே வேலை பார்த்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் எல்லாம் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பிறகு சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதனால் சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பஞ்சு மூட்டைகள் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தினர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதமாகி உள்ளது.

    ×