search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corpse inside the house"

    • தையல்நாயகி கணவர் இறந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
    • தையல்நாயகி வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருகரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மனைவி தையல்நாயகி (வயது 67). இவரது கணவர் இறந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்க சென்றார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் மூதாட்டி வீட்டின் அருகில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது தையல்நாயகி வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×