search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumers Of Electricity"

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.
    • மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்புர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, பறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மேற்கண்ட குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணி வண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிபட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், மாதாகோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவாரூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களுடைய குறைகளை விண்ணப்பம் மூலம் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×