search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of New Road Work"

    • பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் உள்ள தார்சாலை மட்டும் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாகவும், புழுதிகள் பறந்தவண்ணம் காணப்பட்டது.
    • அமைச்சரின் உத்தரவின் பேரில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளி முதல் ரெங்கநாதபுரம், சிவலூர் காலனி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    உடன்குடி:

    உடன்குடி- தாண்டவன்காடு சாலையில் பண்டாரஞ்செ ட்டிவிளை பகுதியில் உள்ள தார்சாலை மட்டும் பல ஆண்டு களாக மிகப்பெரிய குண்டும், குழியுமாகவும், புழுதிகள் பறந்தவண்ணம் காணப்பட்டது.

    இச்சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, இந்து கிறிஸ்தவ ஆலயங்கள், குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ச.ம.க., பா.ஜனதா மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் போரா ட்டங்கள் நடத்தியும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இது குறித்து உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, வார்டு உறுப்பினர்கள் முகம்மது ஆபித், சாரதா ஆகியோர் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்து உடனே நிறைவேற்றி தரும்படி வற்புறுத்தினர்.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் உடனடியாக நடவ டிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினார். அமைச்சரின் உத்தரவின் பேரில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளி முதல் ரெங்கநாதபுரம், சிவலூர் காலனி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது இபித், சாரதா, சரஸ்வதி பங்காளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுமார் 12 ஆண்டுகள் வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×