search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress siege"

    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது
    • காட்பாடியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததை கண்டித்து காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தூர் பஸ் நிலையத்தில் இன்று சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு காட்பாடி ஒ ன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். காட்பாடி வடக்கு ஒன்றிய தலைவர் கணேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பிரசன்ன குமார், 1-வது மண்டல தலைவர் பால குமார், 2-வது மண்டல தலைவர் ஜான் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் மாநில பொதுச் செயலாளர் எஸ் சி எஸ் டி பிரிவு சித்தர் ரஞ்சன் ஆகியோர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    சிறு பான்மை பிரிவு மாவ ட்ட தலைவர் வாகித் பாஷா, ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் நோபல் லிவிங்ஸ்டன், கிருஷ்ணகுமார், கதிர்வேலு, கப்பல் மணி, கணேஷ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் எத்திராஜ் தலைமையில் காங்கிரசார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் தினகரன், மனித உரிமைகள் துறை தலைவர் ஜேம்ஸ் ராஜேந்திரன், குடியாத்தம் முன்னாள் நகர மன்ற தலைவர் தேவராஜ், வேலூர் மாநகர பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட விவசாய அணி தலைவர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் 30 பேரை கைது செய்து தனியாக திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    • பா.ஜ.க அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    ராகுல்காந்தியை அராஜக முறையில் விசாரணை செய்து வரும் பா.ஜ.க அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வி .எம். சி. மனோகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் எம் என் கந்தசாமி, அழகு ஜெயபால், மாநில பொதுச் செயலாளர்கள் சரவணகுமார், மகேஷ்குமார், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராம்கி என்ற ராமகிருஷ்ணன், முன்னாள் மேயர்காலணி வெங்கடாசலம், கவுன்சிலர் காயத்ரி, ராயல் மணி, வளர்மதி கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் அதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    ×