search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compensated"

    உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. #SrilankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் ‘தனிஈழம்’ கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துடன் போராடியது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    உள்நாட்டு போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். அங்கு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சி வீழ்ச்சியடைந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.

    அதன்பிறகும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அதைத்தொடர்ந்து உள்நாட்டு போரின்போது 1 லட்சம் பேர் மாயமாகி விட்டதாக கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு அறிவித்தது.

    இந்நிலையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்தது. அந்த சட்ட வரையறை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இது விவாதத்துக்கு வந்த நிலையில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிராக 43 வாக்குகள் கிடைத்தன. அதன்மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட 1 லட்சம் தமிழர்கள் பலனடைகின்றனர்.

    இந்த சட்டத்துக்கு எதிராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஓட்டு போட்டனர். அதன் மூலம் ராணுவ நடவடிக்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் போராளிகள் பலனடைவார்கள் என குற்றம் சாட்டினர்.

    இந்த சட்டம் குறித்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறும்போது, ‘‘நாங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளோம். உள்நாட்டு போரின்போது வடக்கு பகுதி மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தெற்கு பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்படும்’’ என்றார். #SrilankaParliament
    கோவில்பட்டியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகன் அய்யனார் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 15-4-2009 அன்று சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் மோதியது. இதில் அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அய்யனாரின் தாயார் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 13-12-2016 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு போக்குவரத்து கழகம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 400-யை இழப்பீடாக முத்துலட்சுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 203-யை இழப்பீடாக வழங்குமாறு முத்துலட்சுமி, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 14-ந் தேதி வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு நீதிபதி பாபுலால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் சங்கரநாராயணன் ஜப்தி செய்து, கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினார்.
    ×