search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College Function"

    • சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    மதுரை

    மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் 29-வது விளையாட்டு போட்டி நடந்தது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, கல்லூரி செயலாளர் கரிக்கோல்ராஜ், பொரு ளாளர் ஏ.சி.சி. பாண்டியன், தாளாளர் ஜெயகுமார், தலைவர் மாரிஸ்குமார், முதல்வர் கார்த்திகாராணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசுகையில், 'பெண்கள் பாதுகாப்பு, சமூக ஊட கங்களில் பெண்களின் அணுகுமுறை மற்றும் ஆன்லைன் குற்றங்கள்' குறித்து எடுத்து ரைத்தார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், இன்ஸ்பெக்டர் தங்கமணி ஆகியோர் பதக்கம், பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • திண்டுக்கல்லில் நடைபெற்ற கல்லூரி விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றார்.
    • பெண்கள் தலைமையில் உள்ள வீடு மற்றும் நாடு வளம்பெரும் என அவர் பேசினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசியதாவது:-

    பெண்கள் பொருளா தாரத்தில் உயர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் தலைமையில் இருக்கும் வீடு எவ்வாறு சிறப்பாக இருக்குமோ அதே போல பெண்கள் தலைமையில் செயல்படும் நாடும் சிறப்பாக இருக்கும். அதற்காக ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    துறை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து நேர்மையாக சம்பாதிப்பது எவ்வாறு முக்கியமோ அதே போல நடைமுறைக் கல்வியும் அவசியமாகும். மாணவ-மாணவிகளாகிய நீங்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்லும் போது தமிழ்மொழியை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தி மட்டுமே வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்து விடும். செய்தித்தாள்கள் படிப்பதை தினசரி வாடிக்கையாக வைத்துக் கொண்டால் தேசத்தின் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும் மதத்தின் அடிப்படை வாதிகள் பெண்கள் வளர்ச்சிக்கு எப்போதும் தடை போடுவார்கள். எனவே அது போன்ற நபர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நம் மனம் எப்போதும் 2 விதமான எண்ணங்களை தேடிப்பார்க்கும். ஆனால் நாம் ஒன்றில் தெளிவான முடிவை எடுத்து தேர்வு செய்ய வேண்டும். படிப்பு, வேலை, பொருளாதாரம் இவை சார்ந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ஜாதிய உணர்வுகள் வளராது. இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    ×