search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
    X

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

    • சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    மதுரை

    மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் 29-வது விளையாட்டு போட்டி நடந்தது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, கல்லூரி செயலாளர் கரிக்கோல்ராஜ், பொரு ளாளர் ஏ.சி.சி. பாண்டியன், தாளாளர் ஜெயகுமார், தலைவர் மாரிஸ்குமார், முதல்வர் கார்த்திகாராணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசுகையில், 'பெண்கள் பாதுகாப்பு, சமூக ஊட கங்களில் பெண்களின் அணுகுமுறை மற்றும் ஆன்லைன் குற்றங்கள்' குறித்து எடுத்து ரைத்தார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், இன்ஸ்பெக்டர் தங்கமணி ஆகியோர் பதக்கம், பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    Next Story
    ×