search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Durai Ravichandran"

    • புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனங்களை வழங்கினார்.

    தென்காசி:

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது, 2008-ம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப் பட்டன.

    13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் தி.மு.க. அரசு தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

    அதன்படி முதற்கட்ட மாக ரூ.25 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன் பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் திவ்யா (ஆலங்குளம்), சுப்பம்மாள் (கடையநல்லுர்), காவேரி (கீழப்பாவூர்), சங்கரபாண்டியன் (சங்கரன்கோவில்), பொன் முத்தையா பாண்டியன் (வாசுதேவநல்லுர்) ஆகியோருக்கு புதிய வாகனங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி) முத்துக்கு மார், செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் இளவரசி மற்றும் அலுவலர்கள், வாசு தேவந ல்லூர் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், கவுன்சிலர் முனியராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 439 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில், இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஈம சடங்கிற்கான செலவு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 16 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்திற்கான காசோலைகளும், ஒரு பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான காது ஒலி கருவியும், இரண்டு பயனாளிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 19 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் ரூ.2லட்சத்து 80,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 439 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து மனு தாரர்களுக்கு உரிய பதிலை விரைவாக அளிக்கு மாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி கமிஷனர் (கலால்) நடராஜன் (பொறுப்பு), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×