என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore district borders"

    • 14 சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
    • சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது

    கோவை,

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    அவர்களை தேடும் பணியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அண்டை மாநிலமான தமிழகத்தையொட்டிய நீலகிரி, கோவை மாவட்ட வனப்பகுதிகளிலும் தமிழக வனத்துறையினர் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் குண்டு அடிபட்டு காயம் அடைந்த 2 மாவோயிஸ்டுகள் கோவை மாவட்ட எல்லைபகுதிக்குள் நுழைந்து விடாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைைம தாங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், எஸ்.பி.சி.ஐ.டி, நுண்ணறிவு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு, க்யூ பிரிவு போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தமிழகம்-கேரளா எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, வேலந்தாவளம், காகா சாவடி காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக் டர் கிராந்திகுமார் பேசிய தாவது:-

    கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 14 சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு கூடுதலாக 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின் னரே வாகனங்கள் அனும திக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்பட்டு வருகின்றனர். சந்தேக ப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×