என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore Couple Suicide"

    • திடீரென கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணை. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த அணையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் அணையின் ஓரமாக இருந்து உள்ளனர்.

    அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், இந்த பக்கம் இருக்க வேண்டாம், இது மிகவும் ஆபத்தான பகுதி என்று வயதான தம்பதிகளிடம் கூறி விட்டு, சென்று விட்டார். அவர் கொஞ்சம் தூரம் செல்வதற்குள் திடீரென கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    உடனே இதுகுறித்து தளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அணையில் தண்ணீர் வரத்து அதிகம் காணப்பட்டதாலும், இரவு அதிக நேரமாகி விட்டதாலும் அவர்களின் உடலை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு சல்லடை போட்டு தேடினர். இதில் இருவரது உடலும் மீட்கப்பட்டது.

    பின்னர் இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. ஆனால் கோவையில் எந்த இடம்? பெயர் என்ன? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதனால் தளி போலீசார், அவர்களது புகைப்படத்தை கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×