என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-operative Library"

    • கமுதி அருகே உள்ள கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • இந்த நூற்பாலை ஆதி திராவிட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலை ஆதி திராவிட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நூற்பாலையை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூற்பாலை தரப்பில், மின்சார கட்டணம் அதிகமாக வருவதால் சோலார் பேனல் அமைத்து,மின் கட்டணத்தை குறைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.

    இதனையடுத்து ஆலையை முழுமையாக ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், முதல்வரிடம் ஆலோசனை பெற்று விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தாட்கோ இயக்குனர் கந்தசாமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன்.

    தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சருக்கு நூற்பாலையின் மேலாண்மை இயக்குநர் வஜ்ரவேல் தலைமையில், உதவி மேலாளர் கண்ணன், தொ.மு.ச. கவுரவத் தலைவர் சக்திவேல், தலைவர் மச்சக்கிழவன்,செயலாளர் பாரதிராஜா மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    ×