search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children anger"

    குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.
    குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.  

    பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.  

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

    நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.

    ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம். 
    உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ் கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...
    உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...

    * உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.

    * பலரும் தங்கள் கோபத்தின் காரணத்தை உணராமல் இருக்கிறார்கள். சகிப்புத்தன்மை குறைவே கோபம் வெளிப்பட காரணமாகும்.

    * கோபம் ஏற்படும்போது மூளையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் இருந்து கோப உணர்வுகள் வெளிப்படுவதை கண்டுபிடித்தனர். உற்சாகம் தரும் விஷயங்களில் மனதை ஈடுபடுத்தினால் இந்த அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

    * உடலில் செரொடானின் ரசாயனப் பொருள் அதிகமானால் தீவிர மனப்போக்கு தூண்டப்படும். இதுவே கோபம், எரிச்சல், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை தூண்டுகின்றன. செரோடானின் திரவத்தை கட்டுப்படுத்தினால் அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை தடுத்து கோபத்தையும் இல்லாமல் செய்துவிடலாம்.

    * கோபமானது அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை அதிகமாக தூண்டுகின்றன. இவை ஒருவகையில் உடலுக்கு சில நிமிடங்களுக்கு தீவிர ஆற்றலை வழங்குகின்றன. அதனால் கோபம் அளவாக வரு வது நல்லதுதான் என்று சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான கோபமே, உடல் எந்திரத்தின் வேகத்தை அதிகமாக்கி எளிதில் சூடாக்கிவிடுகிறது. அது பலவித சிக்கல்களை தந்துவிடுகிறது.

    * கோபம் உணர்வுகளின் வடிகால் என்றும் கருதப்படுகிறது. கவலை, வலி, ஏமாற்றம் போன்ற வேதனையான உணர்வுகளின் வடிகாலாக கோபம் வெளிப்படுவதால் அது கொடிய உணர்வல்ல என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எனவே மற்றவர்களை காயப்படுத்தாத அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறல்ல.

    * கோபம் நமது திறன்களை பாதிக்ககக்கூடியது. கோபத்துடன் தொடர்புடைய ரசாயனப் பொருட்கள் மூளை செல்களை அழிக் கிறது. மேலும் புதிய மூளை செல்கள் வளர்வதையும் தடுக்கிறது. இதனால் கோபமானது நமது நினைவுத்திறனில் தடுமாற்றத்தை உருவாக்கும்.



    * உலகில் சரிபாதிக்கும் மேலானவர்கள் கோப வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

    * கோபத்தின் விளைவால் பகை, விரோதம், உறவு முறிவு, போர்கள், வன்முறைகள் நிகழ்வதால் கோபம் கட்டுப்படுத்தக்கூடிய உணர்வாக வலியுறுத்தப்படுகிறது. கோபம் அழிவின் பாதை என்பது அனைத்து மத போதனைகளிலும் சொல்லப்பட்டுள்ளது.

    * ஆண்களைவிட பெண்கள் கோபக்காரர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அவர்கள், ஆண்களைவிட 12 சதவீதம் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்களாம். ஆனால் கோபத்தின் விளைவாக ஆண்களே அதிகமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

    * போதைப் பழக்கம் கோப உணர்வை அதிகமாகத் தூண்டி கொடுமையானதாக மாற்றும் என்றும் ஆய்வு கூறுகிறது.

    * கோபத்தால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம். எனவே கோபம் கொள்ளக்கூடாது.

    * வீடியோ கேம்ஸ் விளையாட்டுகள் கோபத்திற்கும், தீவிர உணர்வுகளுக்கும் ஒரு காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால் விளையாட்டு நேரத்தில் மட்டுமே அவை தீவிர எண்ணத்தை உருவாக்குவதாக அறியப்பட்டு உள்ளது. விளையாட்டும், உடற்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்தும் என்றே ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பழு தூக்கும் பயிற்சியைவிட, நீச்சல் பயிற்சி பலமடங்கு கோபத்தை கட்டுப்படுத்துகிறதாம். உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என உணர்ந்தால் விளையாட்டிலாவது, உடற்பயிற்சியிலாவது கவனம் செலுத்துங்கள்.

    * ஆண்களின் பாலின ஹார்மோன்களான டெஸ்டோஸ் டிரோன்கள், கோபத்தை அதிகம் தூண்டுவதாக அறியப்படுகிறது.

    * டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் நிறைந்த அமெரிக்க நகரங்களான ஆர்லாண்டோ மற்றும் புளோரிடா போன்றவை அதிக கோபக்காரர்கள் வசிக்கும் பகுதியாக கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியான உண்மையாகும்.

    * ரோவியோ நிறுவனம் ‘அங்கிரிபேர்டு’ விளையாட்டையும், சினிமாவையும் உருவாக்கி புகழ்பெற்றது. ‘அங்கிரிபேர்டு’ சினிமா அதிகம் வசூல் செய்த சினிமா படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    * ‘இன்டர்லுகின்-6’ என்ற வைட்டமின்கள் குறைவு கோபத்தை தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த வைட்டமின் பற்றாக் குறையால் இதய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். வைட்டமின்கள் நிரம்பிய காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் இதன் பற்றாக்குறையை ஈடுசெய்யலாம்.

    * கோபத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதாகவும் உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் வெற்றியாளராக உயர விரும்பினால் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். 
    ×