என் மலர்
நீங்கள் தேடியது "Child throw"
- 2வது தளத்திலிருந்து பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை இளம்பெண் ஒருவர் திடீரென கீழே வீசினார்.
- போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்திய போது குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் குழந்தையை வீசவில்லை என்பது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஷாய் குடாபகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
நேற்று மதியம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்திலிருந்து பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை இளம்பெண் ஒருவர் திடீரென கீழே வீசினார். கீழே வீசப்பட்ட குழந்தையின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்து குடியிருப்பினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்திய போது குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் குழந்தையை வீசவில்லை என தெரிவித்தனர். அப்படியானால் வேறு எங்கேயோ குழந்தையை பெற்ற பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார், தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றாரா? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






