என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "child missing"
தேனி:
தேனி அருகே கோட்டூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் பவானி (வயது 15). இவர் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது தாய் பாண்டியம்மாள் வெள்ளகோவில் சென்று பவானியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.
தேனி புதிய பஸ்நிலையத்தில் இறங்கி அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் பாண்டியம்மாள் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பவானி மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியம்மாள் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
போடி சுப்புராஜ் நகரைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (வயது 80). இவர் தனது பேரன் தெய்வம் பராமரிப்பில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று தெய்வம் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது முத்துலெட்சுமி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூதாட்டியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்