என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chennai girl harassment
நீங்கள் தேடியது "Chennai girl harassment"
சென்னை அயனாவரத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiGirlHarassment #MadrasHC
சென்னை:
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆப்ரேட்டர்கள், வாட்ச் மேன்கள் என்று 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த 17 பேரில் வயதானவர்களும் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதன்படி, 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களை சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எஸ்.அறிவழகன், அரவிந்தன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதிகள், ‘16 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியானது இல்லை. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர். #ChennaiGirlHarassment #MadrasHC
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆப்ரேட்டர்கள், வாட்ச் மேன்கள் என்று 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த 17 பேரில் வயதானவர்களும் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதன்படி, 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான போக்சோ வழக்கு, சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களை சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எஸ்.அறிவழகன், அரவிந்தன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதிகள், ‘16 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியானது இல்லை. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர். #ChennaiGirlHarassment #MadrasHC
சென்னையில் 11 வயது சிறுமியை 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டுள்ள குற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன், அறுத்தெறியுங்கள் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். #ChennaiGirlHarassment #Parthiban
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். போதை மருந்து கொடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் அறுத்தெறியுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,
இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது...
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த
ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர்,
ஈக்களாய் மொய்த்துக்
கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே நம் கண்களையும், காதுகளையும்
கூர்மையாக்கி, ____-க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!
என்று குறிப்பிட்டிருக்கிறார். #ChennaiGirlHarassment #Parthiban
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X