search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai college student"

    சென்னையில் கல்லூரி மாணவரை கடத்திய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பெண் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத்முகமது (19). தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு நவீத்முகமது வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினர்.

    உயிருக்கு பயந்த மாணவர் அந்த கும்பல் கூறியபடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். அவரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்.

    இரவு 11 மணி அளவில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் வைத்து நவீத்முகமதை சரமாரியாக தாக்கினார்கள்.

    வலி தாங்கமுடியாமல் அவர் கதறினார். ஆனாலும், அவர்கள் விடவில்லை. மாணவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஐபேடு போன்வற்றை பறித்துக்கொண்டு புதரில் தள்ளிவிட்டு சென்றனர்.

    அதிகாலை 4 மணி அளவில் மயக்கம் தெளிந்து நவீத்முகமது முட்புதர் பகுதியில் இருந்து எழுந்து அருகில் இருந்த கடைக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

    கடை ஊழியரிடம் செல்போனை வாங்கி தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தார். 3 பேர் கொண்ட கும்பலால் தாம் கடத்தப்பட்டது குறித்து அவர் கூறியதையடுத்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு அவரது சகோதரர் வந்தார்.

    ரத்த காயங்களுடன் நின்ற நவீத்முகமதை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் சம்பவம் குறித்து டி.பி. சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து கீழ்பாக்கம் உதவி கமி‌ஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீஸ் படை கடத்தல் கும்பலை பிடிக்க விரைந்தனர்.

    சிகிச்சை பெற்று வரும் நவீத்முகமதுவிடம் விசாரித்துவிட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தப்பட்ட பகுதியில் உளவு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

    மாணவரை கடத்தி சென்றது வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் பாட்ஷா, சரவணன் என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை ஒருவரிடம் வாங்கிக் கொண்டு மாணவரை கடத்தி சென்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அமெரிக்காவில் உள்ள இளம்பெண் ஒருவரை நவீத்முகமது காதலித்து வந்ததாகவும் அவர் கடந்த 6-ந்தேதி சென்னை வந்து ஓட்டலில் தங்கி இருந்ததாகவும் அவரை நவீத்முகமது சந்தித்து பேசியபோது இருவரும் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஓட்டலில் தங்கி இருந்த பெண்ணிடம் திடீரென தகராறு ஏற்பட்டதில் ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது நண்பர்கள் மூலம் நவீத்முகமதை கடத்தி தாக்கி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஓட்டலில் தங்கி உள்ள பெண்ணை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணிற்கு நவீத்முகமதுவுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இந்த மோதல் ஏற்பட்டது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள். பிடிபட்ட பாஸ்கர் வடபழனி போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் உறவினர் எனவும் தெரிய வந்துள்ளது.

    பஸ் மற்றும் ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் கலாட்டா செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் நாளை (திங்கட்கிழமை) கலைக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்க உள்ளன.

    சுமார் 1½ மாதங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி செல்ல மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். பஸ், ரெயில்களில் புறநகர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது முதல் நாள் பயணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    மாணவர்கள் செய்து வந்த இந்த கோலாகல ஏற்பாடு பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. மாணவர்களின் பஸ் பயண கொண்டாட்டம் நிச்சயமாக பயணிகளுக்கு இடையூறாக மாறும் என்று தெரிய வந்தது.

    இது மாணவர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் கலைக் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடந்து வருகிறது. குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே தான் மோதல் சம்பவம் அதிகமாக உள்ளது.

    இதை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரிக்கு மாநகர பஸ், மின்சார ரெயில்களில் வருகிறார்கள்.

    இதில் மாநகர பஸ்சில் வரும் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் ஒரு குழு தலைவனை தேர்ந்தெடுப்பதுண்டு. அவருக்கு ‘ரூட்டு தல’ என்று பெயர் வைத்து பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.

    ‘ரூட்டு தல’ என்பவர் தலைமையில் செயல்படும் அவர்கள் மற்ற கல்லூரி மாணவர்களிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக பெண்களை கிண்டல் செய்வது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடக்கிறது.

    பஸ்சுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வது, தெருக்களில் கத்தியுடன் ஓடுவது போன்ற சம்பவங்கள் சென்னையில் நடந்தன.

    இந்த நிலையில் கலைக் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதையடுத்து பஸ்களில் மாணவர்களிடையே நடக்கும் மோதல் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    இது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் உதவி கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் மற்றும் துணை கமி‌ஷனர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் வரும் மாநகர பஸ் வழித்தடங்களை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பிரச்சினையில் ஈடுபடும் மாணவர்களை பெற்றோருடன் அழைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக போலீசார் ஒவ்வொரு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கினார்கள். அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் நேற்று தனது அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை பெற்றோர்களுடன் அழைத்து அறிவுரை வழங்கினார்.

    போலீஸ் அறிவுரையில், “மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சிக்கினால் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். பஸ்சில் செல்லும் போது கலாட்டாவில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

    சென்னை நகரில் 202 மாநகர பஸ் வழித்தடங்களில் கல்லூரி மாணவர்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 75 மாணவர்கள் கலாட்டா செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 75 மாணவர்களையும் போலீசார் அழைத்து அறிவுரை கூறியுள்ளனர்.

    நாளை கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பஸ் வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #tamilnews

    ×