search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheif secretary"

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து சற்றுமுன்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்தார். இந்த செய்தியும் தொண்டர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து. மாலை 5 மணியளவில் காவிரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகும் என கூறப்படுவதால், அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செயலாளராக சத்தீஸ்கர் மாநில அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த சுப்ரமணியம் பொறுப்பேற்றுக்கொண்டார். #BVRSubrahmanyam #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல்மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

    இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

    காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் (55) காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    முன்னதாக இவர், சத்தீஸ்கர் மாநில அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று ஜம்முவில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்குச் சென்ற சுப்பிரமணியம் பி.பி. வியாசிடம் இருந்து தலைமை செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

    தலைமை செயலகத்துக்கு வந்த சுப்பிரமணியத்தை உள்துறை செயலாளர் ஆர்.கே கோயல், சுகாதாரத்துறை செயலாளர் பவன் கோட்வால், திட்ட மேலாண்மைத்துறை செயலாளர் ரோகித் கன்சால், மற்றும் கமிஷ்னர் ஹிலால் அகமது பார்ரே மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் வரவேற்றனர். #BVRSubrahmanyam #JammuKashmir
    ×