search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "checks"

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும்
    • கேரளா ஆரியங்காவு சோதனை சாவடியில் புளியரை காவல் துறையினர் மற்றும் கேரளா கலால் குழு இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக கேரளா ஆரியங்காவு சோதனை சாவடியில் புளியரை காவல் துறையினர் மற்றும் கேரளா கலால் குழு இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சஞ்சய் காந்தி மற்றும் தமிழக கேரள போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு,அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்த பிறகே மாநிலங்களுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

    ×