என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandrababu"

    • JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
    • படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

    பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். அவர்கள் இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய 'JP: THE LEGEND OF CHANDRABABU' நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

    சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

    இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.

    ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த 'ஹே சினாமிகா' படம் மற்றும் 'ராமன் தேடிய சீதை', 'சாருலதா', 'அலோன்', உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு 'கோலி சோடா- தி ரைசிங்' வெப் தொடரையும் தயாரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தமுறை மோடி நிச்சயமாக பிரதமராக வரவே முடியாது என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். #pmmodi #Chandrababu #parliamentelection
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு விஜயவாடா நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சரியாக சிந்திக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வங்கி சேவைகள் மக்களின் நம்பிக்கையை இழந்தது போன்ற மத்திய அரசின் தோல்விகளை குறிப்பிட்டு இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

    மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்ததால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் விலக்கி கொண்டோம். ஆந்திர மாநிலத்தையும், இங்குள்ள மக்களையும் வஞ்சித்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு இந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்கிறது.

    1996-ம் ஆண்டு மத்தியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்ததில் இருந்து, கடந்த காலத்தில் அரசுகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்குவகித்த தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைக்கும். இதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    வரும் 2019-ம் தேதி நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என பா.ஜ.க.வினர் பகல்கனவு காணுகிறார்கள். அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது. பொய்  வாக்குறுதிகளை வாரி வழங்கி நிறைவேற்ற முடியாத பிரசார பிரதமர் மோடி அடுத்த முறை பதவியில் அமர முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #Chandrababu #parliamentelection
    ×