search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chairman Arunachala Swami temple"

    • சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
    • 29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.

    ஏரல்:

    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு அருணாசல சுவாமி கோவிலை வலம் வருதல் நடைபெறுகிறது. திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு மேல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.

    29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், அதன்பின் ஏரல் நகர வீதி தரிசனம், ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு தாகசாந்தி, ஏரல் நகர் வீதிகளில் தரிசனம், 30-ந்தேதி 12-ம் திருவிழாவுடன் ஆடி அமாவாசை திருவிழா நிறைவுபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

    ×