search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebration of DMK"

    • புதுவை மாநில தி.மு.க. சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து தொகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாள் விழா புதுவை மாநில தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் திருவுருவப் படத்திற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து தொகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், ஏ.கே.குமார், செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், சண்முகம், வடிவேல், கோபாலகிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, கோகுல், பழநி, பிரபாகரன், சத்யாஆறுமுகம், குப்புசாமி, ரவீந்திரன், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள், சோமசெல்வ பாண்டியன், அப்பாஸ் அலி, வழக்கறிஞர்கள் சதீஷ், ஜெயக்குமார், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஜெயக்குமார், வீரமணி, நகர அவைத்தலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், நிர்வாகிகள் யோசேப்பு, துரைப்பாண்டியன், வீரிருப்பு முருகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

    ×