search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cavalcade attacked"

    பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #KanhaiyaKumar
    பாட்னா:

    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவராக இருந்து வருபவர் கன்னையா குமார். இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.

    பெகுசராய் மாவட்டம் தஹியா கிராமத்தில் உள்ள பகவான்பூர் காவல் நிலையம் அருகே நிகழ்ச்சி முடிந்து கன்னையா குமார் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கன்னையா குமார் இருந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.



    இதுதொடர்பாக, இரு தரப்பினரும் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KanhaiyaKumar
    பஞ்சாப் முன்னாள் துணை முதல் மந்திரி சுக்பீர் சிங் பாதல் சென்ற வாகனத்தின் மீது அதிருப்தியாளர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #SukhbirSinghBadal
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சுக்பீர் சிங் பாதல். சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று நன்கியானா சாஹிப் குருத்வாராவுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை அதிருப்தியாளர்கள் சிலர் சூழ்ந்தனர். அவர்கள் சுக்பீர் சிங் பாதலுக்கு கருப்பு கொடி காட்டினர். அதில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல் இருந்த வாகனத்தின் மீது ஷூவையும், கல்லையும் எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதலுக்கு சிரோண்மணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்தது. போலீசார் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.

    முன்னாள் துணை முதல் மந்திரி சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. #SukhbirSinghBadal
    ×