என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "case against the couple"
- ஏற்கனவே பாக்கியநாதனுக்கும் தங்கப்பாண்டிக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் வாய் தகராறு செய்து பின்னர் முற்றியது.
- தங்க பாண்டியனை அந்த தம்பதியினர் தாக்கியும் அவர் வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்ப ட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 75). விவசாயி. இவர் வீட்டின் அருகே உள்ள பாக்கியநாதன் மகன் விஷ்ணு அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்து தங்கபாண்டியன் பாக்கியநாதனை அழைத்து உனது மகன் வந்து விளையாடுவதால் எங்கள் வீடுகளில் கல் விழுகிறது.
ஆகையால் சற்று தள்ளி போய் விளையாடச் சொல் என்று கூறி உள்ளார். ஏற்கனவே பாக்கிய நாதனுக்கும் தங்கப்பா ண்டிக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் வாய் தகராறு செய்து பின்னர் முற்றியது. தங்க பாண்டியனை பாக்கிய நாதன் மற்றும் அவரது மனைவி முனீஸ்வரி இருவரும் தாக்கியும் கல்லெடுத்து தாக்கி உள்ளனர். மேலும் தங்க ப்பாண்டியன் வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தங்க பாண்டியன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் படி பாக்கியநாதன் முனீஸ்வரி ஆகிய 2 பேர் மீது விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் பாலமுருகன் (வயது 41). இவருக்கு சொந்தமான வீடு நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில் உள்ளது. இந்த வீட்டில் ராஜதானியைச் சேர்ந்த வேல்முருகன் (48) என்பவர் ரூ.4 லட்சத்துக்கு ஒத்திக்கு குடியிருந்து வந்தார்.
இந்த வீட்டை விற்க முடிவு செய்து பாலமுருகன் கடந்த 2016-ந் தேதி வீட்டை காலி செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார். அதற்கு வேல் முருகன் தானே இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறினார். ரூ.20 லட்சத்துக்கு விலை பேசி முதல் தவணையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலையை 18.5.16-ந் தேதி வேல்முருகன் கொடுத்துள்ளார்.
அதனை 5 மாதங்கள் கழித்து வங்கியில் செலுத்தி பணம் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். 5 மாதங்கள் கழித்து வங்கியில் பணம் எடுக்க சென்ற போது அது திரும்பி வந்துள்ளது.
இதனிடையே பால முருகனின் தந்தை சுப்புராஜ் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பாலமுருகன், வேல்முருகனிடம் சென்று கேட்டபோது உனது தந்தை சுப்புராஜிடம் பணத்தை கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு எனக்கு தெரியாமல் என் தந்தை பணம் வாங்கி இருக்க மாட்டார் என உறுதியாக கூறினார். வேல் முருகனும் அவரது மனைவி வனிதாவும் பாலமுருகனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி.யிடம் பாலமுருகன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பண மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்