search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CAR COLLIDED"

    • காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன்.
    • சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்து காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன் (வயது 43) .சம்பவத்தன்று இவர் தனது காரில் சேவூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவினாசி சேவூர் ரோடு சூளைப்பகுதியைச் சேர்ந்த பாலமுருளி என்பவர் சென்ற கார் மற்றும் கோவையைச் சேர்ந்த சஞ்சய் பாலு ஆகியோரது கார் மீதும் சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிலர் இரு சக்கர வாகனத்தில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் சேதுராமன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது
    • 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கரூர்

    கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் ஒரு காரில் தர்மபுரியை சேர்ந்த தந்ைத- மகளை அழைத்து கொண்டு பழனியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த கார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தடாக்கோவில் தேசியநெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் ேநற்று இரவு 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, அரியலூரில் இருந்து கேரளாவிற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் வந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து ெதாடா்பாக ேகரளாைவ ேசா்ந்த லாரி டிைரவா் அகில் என்பவாிடம் அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×