search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cambridge University"

    • இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1 வரை 5 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • ராகுல் காந்தி மார்ச் 2ம் தேதி ராஜஸ்தானில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்குகிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று உத்தர பிரதேசத்தில் நுழைந்துள்ளது. 

    இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி லண்டன் செல்கிறார். 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். அதன்பின், நாடு திரும்பும் அவர் டெல்லியில் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மார்ச் 2-ம் தேதி ராஜஸ்தானின் டோல்பூரில் இருந்து மீண்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    ×