search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breach of privilege"

    • அவை நடவடிக்கைகளை தடுத்ததற்காக உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
    • குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அடிக்கடி முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை தடுத்ததற்காக உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும்படி பாராளுமன்ற உரிமைக் குழுவை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநிலங்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×