search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy friend suicide"

    கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த அந்த பெண்ணின் கள்ளக்காதலனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே வள்ளிநாயகபுரம் காட்டுப்பகுதியில் வேப்பமரம் ஒன்றில் வாலிபர் ஒருவரது பிணம் தூக்கில் தொங்கியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியது அங்குள்ள காற்றாலை நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த முருகராஜ் (வயது 20) என்பது தெரியவந்தது. முருகராஜின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கன்டிகைப்பேரியாகும். இவர், புதியம்புத்தூரில் தங்கி இருந்து காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் முருகராஜ், வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

    கன்டிகைப்பேரியில் உள்ள செங்கல் சூளையில் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும், முருகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

    இருவரும் ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் அரசல் புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வரவே முருகராஜ், புதியம்புத்தூருக்கு வேலைக்கு வந்தார். அதன்பிறகும் அந்த பெண்ணுடன், முருகராஜ் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். அந்த பெண்ணும் பெரும்பாலான நேரங்களில் முருகராஜிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர், மீண்டும் மனைவியை கண்டித்தார். தனது கள்ளக்காதலனுடன் பேச முடியவில்லையே என்று மனம் உடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை அறிந்த முருகராஜ் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் புதியம்புத்தூர் வள்ளிநாயகிபுரம் காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இந்த விவரம் போலீசார் விசாரணையில் வெளியானது. முருகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல் லாட்ஜில் கள்ளக்காதலியை கழுத்து அறுத்து கொன்று காதலன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை கொங்கர்குளத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது27). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி பாலாம்பிகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரசாந்துக்கும் பாலாம்பிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயம் தெரியவரவே ஊர்பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அறிவுரை வழங்கினர். இருந்தபோதும் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து வந்ததுள்ளனர்.

    கடந்த 10-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய ஜோடி திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறைஎடுத்து தங்கியுள்ளனர். இருவரும் அங்கே உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்பு பிரசாந்துக்கும், பாலாம்பிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் காதலி பாலாம்பிகா கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    பின்னர் அதிர்ச்சியுடன் எப்படியும் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி ஏற்கனவே வாங்கிவந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்தார்.

    அறைக்கதவு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்ததால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே விடுதி ஊழியர்கள் அறை கதவு தட்டியும் திறக்கப்படவில்லை.

    எனவே திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைகதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது படுக்கையில் வாயில் நுரைதள்ளியபடி பிரசாந்த் இறந்துகிடந்துள்ளார். பாலாம்பிகா கழிவறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×