என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "boy friend suicide"
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை கொங்கர்குளத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது27). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி பாலாம்பிகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரசாந்துக்கும் பாலாம்பிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயம் தெரியவரவே ஊர்பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அறிவுரை வழங்கினர். இருந்தபோதும் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து வந்ததுள்ளனர்.
கடந்த 10-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய ஜோடி திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறைஎடுத்து தங்கியுள்ளனர். இருவரும் அங்கே உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்பு பிரசாந்துக்கும், பாலாம்பிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் காதலி பாலாம்பிகா கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
பின்னர் அதிர்ச்சியுடன் எப்படியும் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி ஏற்கனவே வாங்கிவந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்தார்.
அறைக்கதவு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்ததால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே விடுதி ஊழியர்கள் அறை கதவு தட்டியும் திறக்கப்படவில்லை.
எனவே திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைகதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது படுக்கையில் வாயில் நுரைதள்ளியபடி பிரசாந்த் இறந்துகிடந்துள்ளார். பாலாம்பிகா கழிவறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்