search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bodi bus stand"

    போடி பஸ் நிலையத்தில் பயணிகளை மன நோயாளிகள் மிரட்டி வருகிறார்கள்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிரந்தரமாக 15 மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தங்கி உள்ளனர். பயணிகள் நிற்கும், இளைப்பாறும் இடத்தில் அவர்கள் படுத்துக்கொண்டும், அதே இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்தும் வருகின்றனர்.

    இதனால் பயணிகள் நிற்கும் இடத்தில் துர்நாற்றம் வீசி மழைக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மனநோயாளிகள் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை கம்பால் துரத்தி தாக்கி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்குள் வருவதற்கே பயணிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் மது அருந்தி அதே இடத்தில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையத்தில் மனநோயாளிகளாக சுற்றி திரிந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் கர்ப்பம் அடைந்து உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களை கோடாங்கிபட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    ×