search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoothath Alvar"

    • ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவன் வராக மஹா தேசிகன் ரத்தின அங்கியை உபயமாக வழங்கினார்.
    • கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் பூதத்தாழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவன் வராக மஹா தேசிகன் ரத்தின அங்கியை உபயமாக வழங்கினார். பின்னர் ரத்தின அங்கி அலங்காரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்று தரிசனம் செய்தார்.


    அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர். செப்பு உலோகத்தில் தங்கமுலாம் பூசப்பட்டு, செம்பு கற்கள் பதித்து செய்யப்பட்டுள்ள இந்த விலை உயர்ந்த ரத்தின அங்கியை, ஆழ்வாரின் அவதார உற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய உற்சவங்களில் அலங்கார சேவையாற்ற பயன்படுத்த உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×