search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "besieged the school"

    • மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு செல்லபாஷா வீதியில் அரசு நிதி உதவி பெறும் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகின்ற னர்.

    கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வியில் 630 மாணவ-மாணவிகளும், தமிழ் வழி கல்வியில் 130 மாணவ-மாணவிகளும் படித்தனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆங்கில வழி மாணவர்கள் சேர்க்கையும், தமிழ் வழி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவி களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இதில் ஆங்கில வழி கல்வியில் படிக்கும் சில மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வி புத்தகங்களும், தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு ஆங்கில வழி கல்வி புத்தகமும் வழங்கப்பட்டதாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து இன்று காலை மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று நடந்த விவரம் குறித்து கேட்டனர். அப்போது அரசு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சார்பில் ஒரு உத்தரவு பிறக்க பிறப்பிக்க ப்பட்டுள்ளது.

    அதில் ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி கல்வி இரண்டும் சமமாக கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களில் ஒரு சிலரை தமிழ் வழி கல்வியிலும், அதேப்போல் தமிழ் வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களை ஆங்கில வழி கல்வியிலும் சேர்த்ததாக தலைமையாசிரியர் விளக்கம் அளித்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இங்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×