என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bench"

    • அரசு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தியதை மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் கவனித்தார்.
    • ரெக்கார்டு நோட்டுகளையும் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண் ணங்குடி ஒன்றியத்தில் நடை–பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்காக வந்த கலெக்டரை கண்ணங் குடி ஒன்றிய சேர்மன் சித்தா–னூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் வரவேற்றார்.

    அதனைத் தொடர்ந்து சித்தானூர் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி மற்றும் அங்குள்ள கழிப்பறை கட்டி–டங்களை ஆய்வு செய்த கலெக்டர் மாணவ, மாணவி–களுக்கு அறிவு சார் புத்த–கங்களை சேர்மன் முன்னி–லையில் வழங்கினார். அந்த ஊராட்சியில் புதிதாக கட் டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம், ஊரணி மராமத்து பணிகளை ஆய்வு செய்து அனுமந்தகுடி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற் கொண்டார்.

    அப்போது மாணவ, மாணவிகளுடன் கலந்துரை–யாடி அங்கு புதிதாக கட் டப்பட்டு வரும் பல லட்சம் மதிப்பிலான சுற்றுச்சுவர் பணிகளை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரக் கன்று நட்டு வைத்தார். அனுமந்தகுடி ஊராட்சியில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்து தொடர்ந்து மீனாப் பூர் நூலகம்,

    சடையமங்கலம் வேளா–ளர் குடியிருப்பு பகு–தியில் உள்ள ஊரணியில் மரா–மத்து பணிகள், அதன் அரு–கில் விவசாய பணிகளுக் காக அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பாலம் கட்டும் பணிகள் ஆகையவற்றையும் பார்வையிட்டார்.

    கண்ணங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவ பிரிவுக–ளிலும் ஆய்வு செய்து பதி–வேடுகள் சரியாக பின்பற்றப் படுகிறதா என பார்வை–யிட்டு, நாடாகுடி கிராமத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பொதுமக்களுடன் கலந்து–ரையாடி குறைகளை கேட்ட–றிந்தார். காட்டுக்குடி புதூர் பகுதியில் உள்ள கிச்சன் செட்டை ஆய்வு செய்து கண்ணங்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவல க கட்டிடத்தை பார்வையிட்டு ஒன்றிய அலு–வலகத்தில் அனைத்து பிரி–வுகளிலும் ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வகுப்பறை–யில் ஆசிரியர் பாடம் நடத் தும்போது கலெக்டர் மாண–விகளுடன் பெஞ்சில் அமர்ந்து பாடம் கவனித்தார். மேலும் மாணவிகளின் ரெக்கார்டு நோட்டுகளையும் பார்வையிட்டார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சா–கம் அடைந்தனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகா–வதி, கண்ணங்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், கிராம ஊராட்சி அலுவலர் முத்துக் குமார் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் உடனி–ருந்தனர்.

    ×